Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தமிழகத்தில் ஓட்டை உடைசலான ரயில்பெட்டிகள்: ஐகோர்ட் கிளை அதிருப்தி

தமிழகத்தில் ஓட்டை உடைசலான ரயில்பெட்டிகள்: ஐகோர்ட் கிளை அதிருப்தி

தமிழகத்தில் ஓட்டை உடைசலான ரயில்பெட்டிகள்: ஐகோர்ட் கிளை அதிருப்தி

தமிழகத்தில் ஓட்டை உடைசலான ரயில்பெட்டிகள்: ஐகோர்ட் கிளை அதிருப்தி

ADDED : ஜூன் 22, 2024 05:15 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மதுரை: தமிழகத்தில் ஓடும் ரயில்களில் ஓட்டை, உடைசலான பெட்டிகள் இணைக்கப்படுகின்றன என ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்து உள்ளது.

தஞ்சாவூரை சேர்ந்த சுந்தர் விமலநாதன் என்பவர், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையை டிஜிட்டல் மூலம் பரிசோதிக்க உத்தரவிடக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில்,‛நாடு முழுவதும் டிஜிட்டல் மூலம் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பரிசோதிக்கப்படும் நிலையில் தமிழகத்தில் நடைமுறையில் இல்லை '' எனக்கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறுகையில், தமிழகத்தில் ஓடும் ஏராளமான ரயில்களில் ஓட்டை உடைசலான ரயில் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. வட மாநிலங்களுக்குத் தான் புதிய நவீன ரயில் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.

கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட போதிலும், பராமரிப்பில் தொடர்ந்து காட்டும் அலட்சியம் முகம் சுளிக்கும் வகையில் உள்ளது.பல்வேறு ரயில்களில் பயணிகளுக்கான சேவை படு மோசமாக உள்ளது . ரயிலை முறையாக பராமரியுங்கள் என மத்திய அரசு வழக்கறிஞருக்கு அறிவுறுத்திய நீதபதிகள், விசாரணையை ஜூலை 8 ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us