ADDED : ஜன 08, 2024 12:46 AM
சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல், விருதுநகர் ரோடை சேர்ந்தவர் பிச்சைமணி, 52. இவரது மகள் நித்யலட்சுமி. பி.இ., முடித்துவிட்டு, அரசு வேலைக்கு முயற்சித்து வருகிறார்.
சிவகாசி ரிசர்வ் லைனில் உள்ள டியூஷன் சென்டரில் படித்து வந்தார். உரிமையாளர் பெரியசாமி, நித்யலட்சுமிக்கு அரசு வேலை வாங்கி தருவதாக, 50 லட்சம் ரூபாய் கேட்டார்.
காசோலையாகவும், பணமாகவும் 29 லட்சம் ரூபாயை பெரியசாமி பெற்றார். அவர் கூறியபடி அரசு வேலை வாங்கி தரவில்லை. பெரியசாமி, அவரது மனைவி ராமலட்சுமியிடம் கொடுத்த பணத்தை பிச்சைமணி கேட்டதற்கு, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.