சென்னை தலைநகரா, கொலை நகரா; ஒரே மாதத்தில் 12 பேர் வெட்டிசாய்ப்பு
சென்னை தலைநகரா, கொலை நகரா; ஒரே மாதத்தில் 12 பேர் வெட்டிசாய்ப்பு
சென்னை தலைநகரா, கொலை நகரா; ஒரே மாதத்தில் 12 பேர் வெட்டிசாய்ப்பு

கொடூரம்
சென்னை, கோட்டூர்புரம்,சித்ரா நகர், 'யு பிளாக்' குடியிருப்பில் வசித்தவர் அருண், 25; ரவுடி. இவர் மீது, கொலை உட்பட ஆறு வழக்குகள் உள்ளன. அவரது அண்ணன் அர்ஜுனன், 27. சகோதரர்கள் இருவரும்,நேற்று முன்தினம், கோட்டூர்புரத்தில், காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையைச் சேர்ந்த ரவுடி சுரேஷுடன் சேர்ந்து, மது அருந்தி உள்ளனர். அதன் பின்னர் இரவு, 9:30 மணியளவில், போதையில், கோட்டூர்புரம் சித்ரா நகரில் உள்ள நாகவல்லி கோவில் அருகே, மூவரும் உறங்கினர்.
எதனால் இந்த கொலைகள்?
சென்னை கோட்டூர்புரம் சித்ரா நகரைச் சேர்ந்த ரவுடி சுக்கு காபி சுரேஷ் என்பவருக்கும், கொலையான அருணுக்கும் தொழில் போட்டி காரணமாக, முன் விரோதம் இருந்துள்ளது. ஒருவரையொருவர் தீர்த்துக்கட்ட நாள் குறித்து செயல்பட்டனர். இவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்து வந்தது.
ஒரு மாதத்தில் நடந்த கொலைகள்
* ஆதம்பாக்கத்தில், தந்தையை கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட மகன் கைது.