Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ வரும் 5ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

வரும் 5ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

வரும் 5ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

வரும் 5ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

ADDED : ஜூன் 30, 2025 06:24 AM


Google News
Latest Tamil News
சென்னை: 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 5ம் தேதி வரை, சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மையத்தின் அறிக்கை:

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

நேற்று மதியம் நிலவரப்படி, அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 9 செ.மீ., கோவை மாவட்டம் வால்பாறை, சோலையார், தேனி மாவட்டம் பெரியாறு பகுதிகளில் தலா 5 செ.மீ., கடலுார் மாவட்டம் விருத் தாசலத்தில் 4 செ.மீ., மழை பெய்துள்ளது.

இவை தவிர, சென்னை, விழுப்புரம், புதுக்கோட்டை, கடலுார், திருவள்ளூர், தஞ்சாவூர், சேலம், சென்னை, புதுச்சேரியில் சில இடங்களிலும் மழை பெய்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் 5ம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும். அதேபோல, இன்றும், நாளையும் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை, வழக்கத்தை விட 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக பதிவாகும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us