Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பிப்., 1ல் காவிரி ஆணைய கூட்டம்

பிப்., 1ல் காவிரி ஆணைய கூட்டம்

பிப்., 1ல் காவிரி ஆணைய கூட்டம்

பிப்., 1ல் காவிரி ஆணைய கூட்டம்

ADDED : ஜன 23, 2024 11:45 PM


Google News
சென்னை:காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம், பிப்., 1ல் நடக்கிறது.

தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும்; 2023 ஜூன் முதல் தற்போது வரை, 90.6 டி.எம்.சி., நீரை வழங்காமல், கர்நாடகா நிலுவை வைத்துள்ளது.

இந்த நீர் கிடைத்தால், கோடைகால குடிநீர் தேவையையும், டெல்டா மாவட்ட பாசன தேவையையும் பூர்த்தி செய்ய முடியும். பிப்., 1ல் டில்லியில் நடக்கும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், நிலுவை நீரை திறந்து விட, கர்நாடாகாவுக்கு உத்தரவிடும்படி, தமிழகம் வலியுறுத்த உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us