Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பொறுத்துக் கொள்ள முடியாது; நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றும் விவகாரத்தில் அதிகாரிகள் மீது ஐகோர்ட் அதிருப்தி

பொறுத்துக் கொள்ள முடியாது; நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றும் விவகாரத்தில் அதிகாரிகள் மீது ஐகோர்ட் அதிருப்தி

பொறுத்துக் கொள்ள முடியாது; நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றும் விவகாரத்தில் அதிகாரிகள் மீது ஐகோர்ட் அதிருப்தி

பொறுத்துக் கொள்ள முடியாது; நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றும் விவகாரத்தில் அதிகாரிகள் மீது ஐகோர்ட் அதிருப்தி

ADDED : ஜூன் 11, 2025 12:27 PM


Google News
Latest Tamil News
சென்னை: ''நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளின் செயலை ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடியாது'' என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

சென்னையில் நீர்நிலை பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டை காலி செய்யக் கூறிய தாசில்தாரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (ஜூன் 11) விசாரணைக்கு வந்தது. அப்போது ஐகோர்ட் நீதிபதிகள் கூறியதாவது:

* நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளின் செயலை ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடியாது.

* நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் முறையாக செயல்படுவதில்லை.

* நீர்நிலை ஆக்கிரமிப்பை அங்கீகரிக்க முடியாது. இவ்வாறு ஐகோர்ட் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இதையடுத்து, தாசில்தாரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us