ADDED : ஜூலை 02, 2025 01:32 AM
அஜித்குமார் உடலை தகனம் செய்த போது, அவரது உடல் மீது பெட்ரோல் ஊற்றி, அதன்பின் தீ வைத்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.
பொதுவாக உடல் தகனத்தின் போது, கற்பூரம் வைப்பர்; பெட்ரோல் ஊற்றுவதில்லை. ஆனால், அஜித்குமார் மரணம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளதால், வேகமாக உடலை எரித்து விட வேண்டும் என்பதற்காக, போலீசாரின் நெருக்கடி காரணமாக, பெட்ரோல் ஊற்றப்பட்டதா என்ற சந்தேகம், பொதுமக்களிடம் ஏற்பட்டுஉள்ளது.