த.வெ.க., நிர்வாகிகளை தாக்குவதா? தி.மு.க.,வுக்கு சீமான் கடும் கண்டனம்
த.வெ.க., நிர்வாகிகளை தாக்குவதா? தி.மு.க.,வுக்கு சீமான் கடும் கண்டனம்
த.வெ.க., நிர்வாகிகளை தாக்குவதா? தி.மு.க.,வுக்கு சீமான் கடும் கண்டனம்

எதேச்சதிகாரம்
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது என்ன தேசக்குற்றமா? அதற்காக தி.மு.க., அரசு போலீசாரை ஏவி கடுமையாக தாக்கியுள்ளது எதேச்சதிகாரத்தின் உச்சமாகும். ஜனநாயக நாட்டில் மக்கள்தானே மன்னர்கள்? அரசியல் என்பதே மக்களுக்கு செய்கின்ற சேவைதானே?
இதுதான் திராவிட மாடலா?
பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வது என்றால் கூட எங்கள் பெயரை ஒட்டி நாங்கள் மட்டும்தான் செய்ய வேண்டும், நாங்கள் செய்யும்வரை வேறு யாரும் உதவக்கூடாது என்பது என்ன மாதிரியான மனநிலை? இதற்கு பெயர்தான் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கச்செய்யும் திராவிட மாடலா? இதுதான் தி.மு.க., பெற்றுத்தந்த சமூக நீதியா?
கடும் நடவடிக்கை
தி.மு.க., அரசின் இத்தகைய அதிகார அட்டூழியங்கள் அனைத்தையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். ஆகவே, த.வெ.க பெண் நிர்வாகிகளை தாக்கிய போலீசார் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.