மர்ம நபர்கள் அட்டூழியம்: பீஹாரில் இருவர் சுட்டுக்கொலை
மர்ம நபர்கள் அட்டூழியம்: பீஹாரில் இருவர் சுட்டுக்கொலை
மர்ம நபர்கள் அட்டூழியம்: பீஹாரில் இருவர் சுட்டுக்கொலை

பாட்னா: பீஹார் மாநிலம் சரண் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர்.
பீகாரின் சரண் மாவட்டத்தில் இருவர் பைக்கில் வந்த மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இந்த சம்பவம் பழைய பிஎஸ்என்எல் அலுவலகப் பகுதிக்கு அருகில் உள்ள முபாசில் பகுதியில் நேற்று இரவு நடந்தது. அடையாளம் தெரியாத இருவர் பைக்கில் வந்த மர்ம நபர்களால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக, முபாசில் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக எஸ்.எஸ்.பி. குமார் ஆஷிஷ் கூறியதாவது:
தகவல் அறிந்த நாங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று, பல குண்டு காயங்களுடன் பாதிக்கப்பட்டவர்களை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். இருப்பினும், சிகிச்சையின் போது அவர்கள் இருவரும் உயிரிழந்தனர், சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் அம்ரேந்திர சிங் மற்றும் சாம்பு சிங் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்கள் அந்தப் பகுதியில் நிலம் விற்பனை மற்றும் வாங்குதலில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். சம்பவத்திற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை, ஆனால் வணிகப் போட்டி ஒரு சாத்தியமான காரணமாக இருக்கலாம் என்பதை நிராகரிக்க முடியாது. விசாரணை நடந்து வருகிறது, குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.
இவ்வாறு குமார் ஆஷிஷ் கூறினார்.