ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு; ஐகோர்ட் அதிரடி உத்தரவு
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு; ஐகோர்ட் அதிரடி உத்தரவு
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு; ஐகோர்ட் அதிரடி உத்தரவு

ரூ.1.75 கோடி இழப்பு
துவக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கான பதிவேடுகள் கொள்முதல் செய்தது தொடர்பாக தணிக்கை நடந்தது. அதில், பால் கூட்டுறவு சங்கங்களுக்கு கிறிஸ்துதாஸ், 1.75 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
தள்ளுபடி
மனுதாரர் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார். மனுதாரர் மீது எந்த விசாரணையும் நிலுவையில் இல்லை. அவருக்கு எதிரான உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு வாதிடப்பட்டது. நீதிபதி பிறப்பித்த உத்தரவு: பால் கூட்டுறவு சங்கங்களுக்கு பதிவேடுகளை வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளது. இவ்வழக்கில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் காமராஜ், வள்ளலார் ஆகியோருக்கு எதிராக பொதுத் துறையில் ஒரு தனி நடவடிக்கை துவங்கப்பட்டது.
நடவடிக்கை
குற்றச்சாட்டிற்கான முகாந்திரத்திற்கு ஆதாரங்கள் இருப்பதால், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் காமராஜ், வள்ளலார் மற்றும் மனுதாரர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். சட்டப்படி அடுத்தகட்ட மேல் நடவடிக்கையை, சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் மேற்கொள்ள வேண்டும்.