Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ கூட்டணி தர்மத்தை அ.தி.மு.க., மதிக்கிறது: பிரேமலதா திடீர் பாசம்

 கூட்டணி தர்மத்தை அ.தி.மு.க., மதிக்கிறது: பிரேமலதா திடீர் பாசம்

 கூட்டணி தர்மத்தை அ.தி.மு.க., மதிக்கிறது: பிரேமலதா திடீர் பாசம்

 கூட்டணி தர்மத்தை அ.தி.மு.க., மதிக்கிறது: பிரேமலதா திடீர் பாசம்

ADDED : டிச 01, 2025 12:25 AM


Google News
Latest Tamil News
ஈரோடு: ''கூட்டணி தர்மத்தை அ.தி.மு.க., மதிக்கிறது; கூட்டணி தர்மத்தை மதிப்பவர்களுக்குத்தான் எதிர்காலம்,'' என தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு சட்டசபை தொகுதிகளின், தே.மு.தி.க., நிர்வாகிகள் மற்றும் பூத் முகவர்களுடனான ஆலோசனை கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. இதில், பிரேமலதா பங்கேற்றார்.

பின், அவர் அளித்த பேட்டி:

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. தி.மு.க., 50 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை தான் நிறைவேற்றியுள்ளது. 50 சதவீதம் நிலுவையில் உள்ளது. மீதியுள்ள நான்கு மாதத்திலாவது, எஞ்சிய வாக்குறுதிகளை தி.மு.க., அரசு நிறைவேற்ற வேண்டும்.

எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். ஒவ்வொருவருக்கும், அவரவர் பிறந்த மாநிலத்தில் தான் ஓட்டுரிமை இருக்க வேண்டும். ஓட்டு திருட்டு நடந்தால் மக்கள் புரட்சி வெடிக்கும்.

கூட்டணி இல்லாமல், அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகளால் தேர்தலை சந்திக்க முடியுமா? கடந்த, 2011 தேர்தலில் விஜயகாந்த் கூட்டணி வைத்தார்.

வரும், 2026 தேர்தலில், யாருடன் தே.மு.தி.க., கூட்டணி அமைக்கும் என்பது ஜன., 9ல் அறிவிக்கப்படும்.

வரும் 2026ல் கூட்டணி ஆட்சிதான் அமையும். அதில் தே.மு.தி.க., அங்கம் வகிக்கும். கூட்டணி தர்மத்தை அ.தி.மு.க., மதிக்கிறது. கூட்டணி தர்மத்தை மதிப்பவர்களுக்கு தான் எதிர்காலம்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us