Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மணல் திருட்டை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

மணல் திருட்டை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

மணல் திருட்டை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

மணல் திருட்டை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

ADDED : ஜன 19, 2024 01:23 AM


Google News
சென்னை:அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி அறிக்கை:

தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதி நிதிகளின் அராஜகங்கள் அதிகரித்து வருவது தொடர் கதையாக உள்ளது. வேலுார் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில், தி.மு.க.,வை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகளால், மணல் கொள்ளை நடந்து வருகிறது. இதனால், நிலத்தடி நீர் குறைந்துள்ளது என, அ.தி.மு.க., தரப்பில் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது.

அவர்கள் நடவடிக்கை எடுக்காமல், மவுனம் காத்து வருகின்றனர். அதேபோல், இந்த ஒன்றியத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு, போதிய மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் இல்லாத காரணத்தால், மலைவாழ் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், அணைக்கட்டு பஸ் நிலையம் அருகே, வரும் 22ம் தேதி காலை 10:00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us