Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ இன்று கூடுதல் டோக்கன் பதிவுத்துறை அறிவிப்பு

 இன்று கூடுதல் டோக்கன் பதிவுத்துறை அறிவிப்பு

 இன்று கூடுதல் டோக்கன் பதிவுத்துறை அறிவிப்பு

 இன்று கூடுதல் டோக்கன் பதிவுத்துறை அறிவிப்பு

ADDED : டிச 01, 2025 12:46 AM


Google News
சென்னை: 'முகூர்த்த நாளையொட்டி, பத்திரப்பதிவுக்கு இன்று கூடுதல் டோக்கன்கள் அனுமதிக்கப்படும்' என, பதிவுத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் சொத்து வாங்குவோர், அதற்கான பத்திரத்தை முகூர்த்த நாட்களில் பதிவு செய்ய கூடுதல் ஆர்வம் காட்டுகின்றனர். இதைக் கருத்தில் வைத்து, முகூர்த்த நாட்களில், பதிவுத்துறை கூடுதல் டோக்கன்கள் வழங்க அனுமதிக்கிறது.

அந்த வகையில், கார்த்திகை மாத முகூர்த்த நாள் என்பதால், இன்று அதிக எண்ணிக்கையில் பத்திரங்கள் பதிவுக்கு தாக்கலாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால், அனைத்து சார் - பதிவாளர் அலுவலகங்களிலும், இன்று கூடுதல் டோக்கன்கள் அனுமதிக்கப்படும்.

தினசரி, 100 டோக்கன்கள் அனுமதிக்கப்படும் சார் - பதிவாளர் அலுவலகங்களில், இன்று 150 டோக்கன்களும்; 200 டோக்கன்கள் அனுமதிக்கப்படும் அலுவலகங்களில், இன்று 300 டோக்கன்களும் அனுமதிக்கப்படும் என, பதிவுத்துறை தெரிவித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us