Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ 'மேகதாது அணைக்கு எதிராக வலுவான வாதம் அவசியம்'

 'மேகதாது அணைக்கு எதிராக வலுவான வாதம் அவசியம்'

 'மேகதாது அணைக்கு எதிராக வலுவான வாதம் அவசியம்'

 'மேகதாது அணைக்கு எதிராக வலுவான வாதம் அவசியம்'

ADDED : டிச 01, 2025 12:35 AM


Google News
Latest Tamil News
சென்னை: 'காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், மேகதாது அணை திட்ட அறிக்கைக்கு எதிராக, வலுவான வாதங்களை, தமிழக அரசு முன்வைக்க வேண்டும்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:

கர்நாடகாவில், காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது அணை கட்ட, அம்மாநில அரசு பல ஆண்டுகளாக முயற்சி செய்து, அதற்கான திட்ட அறிக்கையை தயாரித்து, காவிரி மேலாண்மை ஆணையத்தில் சமர்ப்பித்தது.

இதை விவாதத்திற்கு, ஆணையம் எடுத்துக்கொள்ளக் கூடாது என, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. ஆனால், இந்த மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், டில்லியில், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம், வரும் 8ம் தேதி நடக்கிறது. இதில், மேகதாது அணை குறித்து, விவாதம் நடக்க இருப்பதாக, தகவல்கள் வருகின்றன. இந்த கூட்டத்தில், தமிழக அரசு சார்பில், வலுவான ஆதாரங்கள் முன்வைக்க வேண்டும்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுப்பது குறித்து, புள்ளி விபரங்களுடன் ஆணையத்தில் வாதங்களை முன்வைத்து, மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us