ADDED : ஜூலை 04, 2025 10:47 PM
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் ஐந்து பேரை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடலோர காவல் படை கைது செய்தது
இலங்கை நீதிமன்றம் விடுவித்ததை அடுத்து, ஐந்து பேரும் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தனர்.தமிழக அரசு ஏற்பாடு செய்த வாகனங்களில், அவர்கள் தங்கள் ஊருக்கு திரும்பினர்.