திருவள்ளூரில் ஓராண்டில் 36 கொலை சம்பவங்கள்; தி.மு.க.,வுக்கு சேவையாற்றும் உளவுத்துறை
திருவள்ளூரில் ஓராண்டில் 36 கொலை சம்பவங்கள்; தி.மு.க.,வுக்கு சேவையாற்றும் உளவுத்துறை
திருவள்ளூரில் ஓராண்டில் 36 கொலை சம்பவங்கள்; தி.மு.க.,வுக்கு சேவையாற்றும் உளவுத்துறை

ஏழு முக்கிய சம்பவங்கள்
1 திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தில் 2025 ஜூன், 25ம் தேதி நாட்டு வெடிகுண்டு வெடிக்க செய்து முகேஷ், 22, உயிரிழந்தார். போதை வஸ்த்துக்கள் விற்பனையை, காவல் துறையிடம் தெரிவித்ததால், அவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டனர்.
தகவல்களை கோட்டை விடும் போலீசார்
குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க வேண்டிய உளவுத்துறை போலீசார், தி.மு.க.,விற்கு பூத் வாரியாக உள்ள ஓட்டு வங்கி எவ்வளவு? கிராமங்களில் ஜாதி வாரியாக பதிவாகும் ஓட்டுகளில், எத்தனை சதவீதம் தி.மு.க.,விற்கு கிடைக்கும். எதிர்க்கட்சி முக்கிய பிரமுகர்களின் செயல்பாடுகள், புதிதாக துவக்கப்பட்ட தமிழக வெற்றி கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகளை ஆய்வு செய்து தகவல் சேகரிப்பதில் மும்முரம் காட்டுகின்றனர். இதனால், சட்டம் - ஒழுங்கு குறித்து தகவல்களை சேகரிக்க முடியாமல், முன்கூட்டியே கணிக்காமல் கோட்டை விடுகின்றனர்.