Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ பள்ளி மாணவன் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு; சென்னையில் பகீர் சம்பவம்

பள்ளி மாணவன் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு; சென்னையில் பகீர் சம்பவம்

பள்ளி மாணவன் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு; சென்னையில் பகீர் சம்பவம்

பள்ளி மாணவன் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு; சென்னையில் பகீர் சம்பவம்

ADDED : ஜூன் 05, 2025 02:05 PM


Google News
Latest Tamil News
சென்னை: மயிலாப்பூர் அருகே பள்ளி மாணவன் உள்பட ஒரே தெருவைச் சேர்ந்த 3 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றிரவு சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த சூர்யா, கவியரசு மற்றும் 17 வயதுள்ள பள்ளி மாணவன் ஆகிய 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. தலையில் பலத்த காயங்களுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மைத்ரன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ஆந்திராவில் ஏற்பட்ட பகை காரணமாக இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us