Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/108 ஆம்புலன்ஸ் சேவை 19.19 லட்சம் பேர் பயன்

108 ஆம்புலன்ஸ் சேவை 19.19 லட்சம் பேர் பயன்

108 ஆம்புலன்ஸ் சேவை 19.19 லட்சம் பேர் பயன்

108 ஆம்புலன்ஸ் சேவை 19.19 லட்சம் பேர் பயன்

ADDED : ஜன 05, 2024 11:27 PM


Google News
சென்னை:அவசரகால, 108 ஆம்புலன்ஸ் சேவை வாயிலாக, கடந்தாண்டில் 19.19 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்.

தமிழக மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ், இ.எம்.ஆர்.ஐ., கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம், 108 ஆம்புலன்ஸ் சேவையை செயல்படுத்தி வருகிறது. மொத்தம், 1,353 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படும் நிலையில், 6,000த்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

தினமும் அவசர தேவைக்கு, 10,000 அழைப்புகள் வரும் நிலையில், 2023ம் ஆண்டில், 19.19 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்.

அதில், பிரசவ காலத்தில், 5.07 லட்சம் பேர்; சாலை விபத்துகளில், 3.34 லட்சம் பேர்; இதய நோயாளிகள், 1.9 லட்சம் பேர் அதிகம் பயன்படுத்தி உள்ளனர்.

அவர்களில், சென்னையில் 1.05 லட்சம் பேர்; திருவள்ளூரில் 91,084 பேர் பயனடைந்துள்ளதாக 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us