'மக்கள் நலனுக்கான போராட்டம் தொடரும்!'
'மக்கள் நலனுக்கான போராட்டம் தொடரும்!'
'மக்கள் நலனுக்கான போராட்டம் தொடரும்!'
ADDED : ஜூன் 05, 2024 01:02 AM
சென்னை:'தேர்தலில் தோல்வி அடைந்தாலும், மக்கள் நலனுக்கான பா.ம.க.,வின் போராட்டம் தொடரும்' என, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை:
லோக்சபா தேர்தலில், பா.ம.க.,வுக்கு வெற்றி கிடைக்கவில்லை. மக்கள் நலனுக்கான திட்டங்களையும், வாக்குறுதிகளையும் முன்வைத்து, களமிறங்கி போராடியும் வெற்றி கிடைக்காதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
தேர்தல் களத்தில் ஆளும் தி.மு.க.,வுக்கு எதிரான மக்களின் மனநிலையை நன்றாக பார்க்க முடிந்தது. ஆனாலும், ஆளும் கூட்டணியே அனைத்து இடங்களிலும் வென்றுள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன.
ஆனாலும், ஜனநாயகத்தில் மக்கள் தான் இறுதி எஜமானர்கள். மக்கள் அளித்த தீர்ப்பை, பா.ம.க., தலைவணங்கி ஏற்கிறது. அவர்களின் ஆதரவையும், நம்பிக்கையையும் பெற தொடர்ந்து உழைப்போம்.
தேர்தல் வெற்றி, தோல்விகளைக் கடந்து, மக்களின் பிரச்னைகளுக்காக போராடுவதை, பா.ம.க., முதன்மை கடமையாகக் கொண்டிருக்கிறது; அதே நிலை தொடரும்.
இனிவரும் காலங்களிலும் தமிழக மக்களின் பிரச்னைகளுக்காகவும், நலன்களுக்காகவும் பா.ம.க., போராட்டம் தொடரும்.
மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதில் பா.ம.க., ஓயாது. தேசிய ஜனநாயகக் கூட்டணியை மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் நிலைக்கு அழைத்துச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.