/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஊட்டியில் பெய்த கனமழை: கடும் குளிரான காலநிலை ஊட்டியில் பெய்த கனமழை: கடும் குளிரான காலநிலை
ஊட்டியில் பெய்த கனமழை: கடும் குளிரான காலநிலை
ஊட்டியில் பெய்த கனமழை: கடும் குளிரான காலநிலை
ஊட்டியில் பெய்த கனமழை: கடும் குளிரான காலநிலை
ADDED : ஜூன் 05, 2024 01:02 AM

ஊட்டி;ஊட்டியில் நேற்று மாலை கன மழையுடன் கடும் குளிரான காலநிலை நிலவியதால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த மழை விவசாய நிலங்களுக்கு உகந்ததாக அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் முதல் மாலை வரை மழை பெய்தது.
இந்த மழையால் படகு இல்லம் சாலை, ரயில்வே நிலையம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால், வாகனங்கள் சிரமத்திற்கு இடையே இயக்கப்பட்டன. நகரின் பல இடங்களில், வாகனங்கள் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கன. குளிரான காலநிலையால், சுற்றுலாப் பயணிகள் பாதிப்புக்குள்ளாயினர். இதே காலநிலை தொடரும் பட்சத்தில், எதிர்வரும் நாட்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைய வாய்ப்புள்ளது.