வனபத்ரகாளியம்மன் கோவில் அறங்காவலர் தற்காலிக நீக்கம்
வனபத்ரகாளியம்மன் கோவில் அறங்காவலர் தற்காலிக நீக்கம்
வனபத்ரகாளியம்மன் கோவில் அறங்காவலர் தற்காலிக நீக்கம்
ADDED : ஜூன் 07, 2024 07:23 PM
மேட்டுப்பாளையம்:கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலராக வசந்தா பதவி வகித்து வந்தார். இவர் மீது கோவில் நிர்வாகம், மேட்டுப்பாளையம் போலீசில், தட்டு உண்டியல் காணிக்கை குறித்து கொடுத்த புகாரின்படி, வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனால், வசந்தா தலைமறைவாக உள்ளார். இந்நிலையில், தமிழக அரசு இவர் மீது, 23 குற்றச்சாட்டுகள் சுமத்தி, ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. பரம்பரை அறங்காவலர் வசந்தாவை, தற்காலிகப் பதவி நீக்கம் செய்து, தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
மேலும், கோவில் நிர்வாகத்தை கவனிக்க, பண்ணாரி மாரியம்மன் கோவில் துணை கமிஷனர் மேனகா, தக்காராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவு பரம்பரை அறங்காவலர் வீட்டு கதவில் மேட்டுப்பாளையம் ஆய்வாளர் வாயிலாக ஒட்டப்பட்டது.
இதையடுத்து, வனபத்ரகாளியம்மன் கோவில் அலுவலகத்தில், கோவை மண்டல ஹிந்து சமய அறநிலைத்துறை இணை கமிஷனர் ரமேஷ், கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி ஆகியோர் முன்னிலையில், மேனகா, தக்காராக பொறுப்பேற்றார். ஆய்வாளர் ஹேமலதா உட்பட பலர் பங்கேற்றனர்.