புதுமை திட்டங்களால் நகரமயமாக்கலில் தமிழகம் முன்னணி: அரசு பெருமிதம்
புதுமை திட்டங்களால் நகரமயமாக்கலில் தமிழகம் முன்னணி: அரசு பெருமிதம்
புதுமை திட்டங்களால் நகரமயமாக்கலில் தமிழகம் முன்னணி: அரசு பெருமிதம்

அரசு செய்திக்குறிப்பு:
இந்தியாவின் நகர்ப்புற மக்கள் தொகை, 1991ல் 25.71 சதவீதம் என இருந்தது. கடந்த 2001ல், 31.16 சதவீதமாக உயர்ந்தது. அதேநேரம் தமிழகத்தில் நகர்ப்புற மக்கள் தொகை, 2011ம் ஆண்டில் 48.45 சதவீதமாக உயர்ந்து, நகரமயமாதலில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது.
நகர்ப்புற பசுமையாக்கம்
நகர்ப்புற உள்ளாட்சிகளில், பல ஆண்டுகளாக குவிந்திருந்த திடக்கழிவுகள், 'பயோமைனிங்' முறையில் அற்றப்படுகின்றன. அந்த நிலங்களில் சுற்றுச்சூழலை மேம்படுத்த, மரங்கள் நடப்படுகின்றன. இதுவரை, 41 உள்ளாட்சி அமைப்புகளில் மீட்கப்பட்டுள்ள, 127.84 ஏக்கர் நிலத்தில், 1.66 கோடி ரூபாய் மதிப்பில், நாவல், நெல்லி, கொடுக்காப்புளி, பாதாம், வேம்பு, புளியமரம், புங்கன்மரம் என, 57,505 மரங்கள் நட அனுமதிக்கப்பட்டு உள்ளன; இதுவரை 56,958 மரங்கள் நடப்பட்டு, சிறப்பான முறையில் பராமரிக்கப்படுகின்றன.
விருதுகள்
துாய்மை கணக்கெடுப்பு மாநில தரவரிசைப் பட்டியலில், தமிழகம் 22ம் இடத்தில் இருந்தது. கடந்த ஆண்டுக்கான தர வரிசை பட்டியலில், 10ம் இடத்திற்கு உயர்ந்துள்ளது. ஒரு லட்சத்துக்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் தரவரிசையில், திருச்சி மாநகராட்சி மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது.