தேர்தல் நடத்தை விதிகள் நாளை முடிவு
தேர்தல் நடத்தை விதிகள் நாளை முடிவு
தேர்தல் நடத்தை விதிகள் நாளை முடிவு
ADDED : ஜூன் 05, 2024 02:15 AM
சென்னை:தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அளித்த பேட்டி:
ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது உட்பட வேறு பிரச்னைகள் குறித்து, அரசியல் கட்சிகளிடம் இருந்து புகார் எதுவும், தலைமை தேர்தல் அலுவலகத்திற்கு வரவில்லை. தமிழகத்தில் ஓட்டு எண்ணிக்கை அமைதியாக முடிந்தது.
தலைமை தேர்தல் கமிஷனர், தேர்தல் முடிவுகளை ஜனாதிபதியிடம் வழங்குவார். அதன்பின்,மத்தியில் புதிய ஆட்சி அமைக்க நடவடிக்கை துவங்கும். தேர்தல் நடத்தை விதிகள், நாளை வரை அமலில் இருக்கும்.
இவ்வாறு கூறினார்.