ADDED : மார் 13, 2025 11:10 PM

டாஸ்மாக்கில் 1,000 கோடி ரூபாய்க்கும் மேல் ஊழல் நடந்துள்ளது. எனவே, இதுகுறித்து தமிழக முதல்வர் விளக்கம் அளித்தாக வேண்டும். இந்த முறைகேடுகளை மறைப்பதற்காகவே தொகுதி மறுசீரமைப்பு விவகாரம், ரூபாயின் சின்னத்தை மாற்றுவது என புதிது புதிதாக விவகாரங்களை கையில் எடுத்துள்ளனர்.
சத்தீஸ்கர் மற்றும் டில்லியில் எப்படி மதுபான ஊழல் பெரியதாக இருந்ததோ, அதை விட பெரியதாக டாஸ்மாக் ஊழல் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
அமலாக்கத்துறையின் அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகியுள்ள நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் இது குறித்து பா.ஜ., சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளிவரும்.
அண்ணாமலை, தலைவர், தமிழக பா.ஜ.,