ADDED : ஜூன் 08, 2024 01:29 AM
சென்னை:இரண்டு துணை கலெக்டர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலராகப் பணிபுரியும் சுப்பையா, மாவட்ட வருவாய் அலுவலராக பதவி உயர்வு பெற்று, சென்னை ஹிந்து சமய அறநிலையத்துறையில், கோவில் நிலங்கள் தனி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராஜ், மாவட்ட வருவாய் அலுவலராக பதவி உயர்வு பெற்று, சென்னை நில நிர்வாக ஆணையரகத்தில், நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அரசாணையை, பொதுத்துறை செயலர் நந்தகுமார் வெளியிட்டு உள்ளார்.