ADDED : ஜூன் 02, 2024 11:27 PM
சாத்துார்: சாத்துார் முள்ளிச் செவல் சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் செல்வக்குமார் 34. படந்தால் மேலத்தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு நேற்று மாலை 4:00 மணிக்கு டூவீலரில் வந்தார்.
டூவீலரை நிறுத்தி விட்டு நடந்து சென்றபோது அப்பகுதியில் சென்ற உயரழுத்த மின்சாரக் கம்பி திடீரென 2 ஆக அறுந்து இவர் மீது விழுந்தது.
இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.