Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ மூன்று பேர் கொலை வழக்கில் மேலும் மூவரிடம் விசாரணை

மூன்று பேர் கொலை வழக்கில் மேலும் மூவரிடம் விசாரணை

மூன்று பேர் கொலை வழக்கில் மேலும் மூவரிடம் விசாரணை

மூன்று பேர் கொலை வழக்கில் மேலும் மூவரிடம் விசாரணை

ADDED : ஜூலை 21, 2024 05:36 AM


Google News
நெல்லிக்குப்பம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை கொலை செய்து எரித்த வழக்கில் கைது செய்யப்பட்டவரின் கூட்டாளிகள் மூவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலுார் அடுத்த காராமணிக்குப்பத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் மனைவி கமலீஸ்வரி,60; இவரது இளைய மகன் சுரேந்தர்குமார்,37; இவரது மகன் இசாந்த்,8; ஆகியோர் கடந்த 15ம் தேதி பூட்டிய வீட்டில் கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்டு கிடந்தனர்.

நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில் கிடைத்த தகவலின் பேரில், மூவரை வெட்டி கொலை செய்த அதேபகுதியை சேர்ந்த பழனி மகன் சங்கர்ஆனந்த்,21; இவருக்கு பெட்ரோல் வாங்கி கொடுத்த நெல்லிக்குப்பத்தை சேர்ந்த முகமது அலி மகன் சாகுல் அமீது,20; ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனையொட்டி, சங்கர் ஆனந்திற்கு பணம் கொடுத்த அவரது நண்பர்கள் மூவரை பிடித்து, எதற்காக பணம் கொடுத்தனர் என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us