Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ ஒருத்தருக்கு எத்தனை மது பாட்டில் விற்கலாம்? : விதி உருவாக்க கோரிக்கை

ஒருத்தருக்கு எத்தனை மது பாட்டில் விற்கலாம்? : விதி உருவாக்க கோரிக்கை

ஒருத்தருக்கு எத்தனை மது பாட்டில் விற்கலாம்? : விதி உருவாக்க கோரிக்கை

ஒருத்தருக்கு எத்தனை மது பாட்டில் விற்கலாம்? : விதி உருவாக்க கோரிக்கை

ADDED : ஜூன் 29, 2024 01:40 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி பதுக்குவதை தடுக்க, ஒருவருக்கு எத்தனை பாட்டில் விற்கப்பட வேண்டும் என்ற விதிமுறையை வெளியிடுமாறு, டாஸ்மாக்கிற்கு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, தமிழக டாஸ்மாக் பணியாளர்கள் சங்க பொதுச்செயலர் தனசேகரன் கூறியதாவது:

மது வாங்க வருவோர், ஒரு பாட்டில், இரு பாட்டில் என வாங்குவர். மதுக்கூடங்களுக்கு மது அருந்த வருவோர், நேரடியாக மதுக்கூடத்திற்கு சென்று, அங்கு பணிபுரியும் ஊழியரிடம் மது வாங்கி வரச் சொல்லி அனுப்புகின்றனர்.

அவர்களும் ஒரு மேஜைக்கு இரண்டு, மூன்று பாட்டில் வீதம், 4 - 5 மேஜைகளுக்கு சேர்த்து, ஒரே சமயத்தில் மொத்தமாக மது பாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர். இது, மது அருந்த வந்தவர்களுக்கு வாங்கப்படுகிறதா அல்லது பதுக்கி விற்க வாங்கப்படுகிறதா என்பது, மதுக்கடை ஊழியர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்கும் போது, போலீசாரிடம் பிடிபட்டு விசாரணையில், 'எங்கிருந்து இவ்வளவு பாட்டில் வந்தது' என்று கேட்டால், ஊழியர்களை கைகாட்டி விடுகின்றனர். இதனால், டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்த பிரச்னைக்கு தீர்வு காண, தனிநபர் ஒருவருக்கு ஒருமுறை எத்தனை பாட்டில் விற்கப்பட வேண்டும் என்ற விதிமுறையை டாஸ்மாக் உருவாக்கி, விரைவில் வெளியிட வேண்டும். மதுக்கூடத்தில் பணிபுரிவோருக்கு, 'ஆதார்' உள்ளிட்ட அடையாள ஆவணம் பெற்று மது விற்க வேண்டுமா எனவும், டாஸ்மாக் நிர்வாகம் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us