Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ சதுரகிரியில் பவுர்ணமி வழிபாடு 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி

சதுரகிரியில் பவுர்ணமி வழிபாடு 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி

சதுரகிரியில் பவுர்ணமி வழிபாடு 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி

சதுரகிரியில் பவுர்ணமி வழிபாடு 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி

ADDED : ஜூன் 17, 2024 12:41 AM


Google News
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆனி மாத பிரதோஷம், பவுர்ணமி வழிபாட்டிற்காக ஜூன் 19 முதல் 21 வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இக்கோயிலில் ஜூன் 19ல் ஆனி மாத பிரதோஷம், 21ல் பவுர்ணமி வழிபாடு நடக்கிறது. இதனை முன்னிட்டு ஜூன் 19 முதல் 21 வரை 4 நாட்கள், தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வனம் மற்றும் வனப்பகுதி நலன் கருதி பிளாஸ்டிக் பொருட்கள், எளிதில் தீப்பற்றும் பொருட்களை பக்தர்கள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us