Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்; ஆர்.டி.ஓ., மலர் வளையம் வைத்து மரியாதை

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்; ஆர்.டி.ஓ., மலர் வளையம் வைத்து மரியாதை

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்; ஆர்.டி.ஓ., மலர் வளையம் வைத்து மரியாதை

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்; ஆர்.டி.ஓ., மலர் வளையம் வைத்து மரியாதை

ADDED : ஜூன் 01, 2024 02:20 AM


Google News
Latest Tamil News
தேனி ; தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தங்கம்மாள்புரம் ஊராட்சி, பச்சையப்பாபுரத்தை சேர்ந்த அழகுமுத்து 43. இவர் மே 28ல் விபத்தில் காயமடைந்து தேனி அரசு மருத்துவக்கல்லுாரியிலும், பின் தீவிர சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மே 30ல் சிகிச்சை பலன் இன்றி மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அழகுமுத்துவின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதாக மனைவி முத்துமாரி, குடும்பத்தினர் டாக்டர்களிடம் தெரிவித்தனர்.

மதுரை வேலம்மாள் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் இருந்து மூளைச்சாவு அடைந்த அழகுமுத்துவின் இதயம், கண், நுரையீரல், கணையம், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தமிழ்நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்திருப்பவர்களுக்கு தானமாக வழங்கப்பட்டது.

பச்சையப்பாபுரத்தில் அழகுமுத்துவின் உடலுக்கு அரசு சார்பில் பெரியகுளம் ஆர்.டி.ஓ., முத்துமாதவன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us