Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ மீனவர்களின் வேலை நிறுத்தத்தால் ராமேஸ்வரத்தில் படகுகள் நிறுத்தம்

மீனவர்களின் வேலை நிறுத்தத்தால் ராமேஸ்வரத்தில் படகுகள் நிறுத்தம்

மீனவர்களின் வேலை நிறுத்தத்தால் ராமேஸ்வரத்தில் படகுகள் நிறுத்தம்

மீனவர்களின் வேலை நிறுத்தத்தால் ராமேஸ்வரத்தில் படகுகள் நிறுத்தம்

ADDED : ஜூன் 25, 2024 01:35 AM


Google News
Latest Tamil News
ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி நேற்று ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்ததால் படகுகள் நிறுத்தப்பட்டு மீன்பிடி தொழில் முடங்கியது.

ஜூன் 22ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இவர்களையும், படகையும் விடுவிக்க கோரி நேற்று ஒரு நாள் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.

ராமேஸ்வரத்தில் 600 படகுகளை மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தி வைத்தனர். 79 சிறிய ரக விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

தடை காலம் 60 நாட்களுக்குப் பின் ஜூன் 15 முதல் தற்போது வரை 2 முறை மட்டுமே மீன்பிடிக்க சென்ற நிலையில் மீனவர்கள் வேலை நிறுத்தத்தால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டு மீனவர்கள் வீடுகளில் முடங்கினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us