கருணாநிதி காலத்தில் தீய அரசியல் துவங்கியது: சீமான் போட்டு தாக்குகிறார் !
கருணாநிதி காலத்தில் தீய அரசியல் துவங்கியது: சீமான் போட்டு தாக்குகிறார் !
கருணாநிதி காலத்தில் தீய அரசியல் துவங்கியது: சீமான் போட்டு தாக்குகிறார் !

பாடல் பாடியசீமான்
' கருணாநிதி குறித்து கள்ளக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே என்று பாடல் உள்ளது. நான் பாடல் பாடுகிறேன். என் மீது வழக்குப்பதிவு செய்யுங்கள். 'கள்ளத்தனம் செய்த கிராதகன் கருணாநிதி! சதிகாரன் கருணாநிதி!' என நான் பாடுகிறேன் என்று சீமான் பாடல் பாடி காட்டினார். என் மீது முடிந்தால் வழக்குப்பதிவு செய்யுங்கள். நீங்க பிள்ளைப்பூச்சியை பிடித்து விளையாடுவீர்கள். தேள், பாம்புவை பிடிப்பீர்களா?. புலி, சிங்கத்துடன் மோதுவீர்களா?. முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து பேசவே கூடாதா?.
தீய ஆட்சி
நீங்க ஆட்சிக்கு வந்ததால் உங்க அப்பாவை புனிதர் ஆக்க முயற்சிக்கிறீர்களா?. தமிழினத்திற்கு செய்த துரோகம் எல்லாம் மறந்து போய்விடுமா? இந்த நாட்டில், தமிழர் இன வரலாற்றில், தீய ஆட்சி மற்றும் தீய அரசியலின் துவக்கம் கருணாநிதி காலத்தில்தான். இதனை யாராலும் மறுக்க முடியுமா? அண்ணாத்துரை இருந்த வரை உள்ள அரசியலை எடுத்து பாருங்கள். எவ்வளவு நாகரீகம், கண்ணியம் இருந்தது என்று பாருங்கள்.
ஊழல், லஞ்சம், கொலை
கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகு தான் ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, அவதூறு பேச்சுகள். அநாகரீக அரசியல், சாராயம் வந்தது. முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி பேசவே கூடாதா?. முன்னாள் முதல்வர் பழனிசாமி குறித்து ஸ்டாலின் அவதூறாக பேசிய வீடியோ என்னிடம் உள்ளது. நீங்கள் பேசலாம். அது கருத்துரிமை. நாங்கள் பேசினால் அவமதிப்பா?. இவ்வாறு சீமான் கூறினார்.