லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு! மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கைது
லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு! மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கைது
லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு! மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கைது
ADDED : ஜூன் 12, 2024 06:34 PM
திருப்பூர்: , 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கைது
செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் திருச்சி ரோட்டில் உள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் சசிலேகா தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் இன்று விசாரணை மேற்கொண்டனர். மின் இணைப்புக்காக உதவி செயற்பொறியாளர் சுரேஷ்பாபு, 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதை தொடர்ந்து, கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.