புதிய சட்டங்களை திரும்ப பெற நடவடிக்கை எடுங்கள் முதல்வரிடம் வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்
புதிய சட்டங்களை திரும்ப பெற நடவடிக்கை எடுங்கள் முதல்வரிடம் வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்
புதிய சட்டங்களை திரும்ப பெற நடவடிக்கை எடுங்கள் முதல்வரிடம் வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்

வேண்டுகோள்
அப்போது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து, உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியதற்காக, முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.
ஏற்க முடியாது
சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்தோம். இன்று கூட்டமைப்பு சார்பில், மாவட்ட நீதிமன்ற வளாகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தவும், நாளை நீதிமன்றத்தை புறக்கணிக்கவும் முடிவு செய்து உள்ளோம். இது, மக்களுக்கு எதிரான சட்டம்; வழக்கறிஞர் சமுதாயத்திற்கும் எதிரானது.
எங்களுக்கு எதிரானது
கடந்த 100 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த சட்டங்களை மாற்றி அமைத்துள்ளனர். குற்றம் செய்தவருக்கு ஆலோசனை வழங்கினால், அவருக்கு விதி, 113ன் கீழ் ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம் என்பது, வழக்கறிஞர்களுக்கு எதிரானது. இது, வழக்கறிஞர்கள் மற்றும் பொது மக்களுக்கு எதிரான சட்டம்.
குளறுபடிகள் உள்ளன
மூன்று சட்டங்களை அவசரமாக கொண்டு வந்துள்ளனர். இச்சட்டங்களால், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், போலீசார், பொதுமக்கள், வங்கியாளர்கள் என அனைவரும் பாதிக்கப்படுவர். லோக்சபா, ராஜ்யசபாவில் சட்டத்தை அறிமுகப்படுத்திய போது, பாதி எம்.பி.,க்களை வெளியேற்றி நிறைவேற்றி விட்டனர். இச்சட்டங்களில் நிறைய குளறுபடிகள் உள்ளன. சட்டங்களின் பெயர், உச்சரிக்க முடியாத மொழியில் உள்ளது.