கஞ்சா விற்பனையை காட்டிக்கொடுத்த அ.தி.மு.க., பிரமுகர் படுகொலை தி.மு.க., கவுன்சிலரின் கணவர் உட்பட 9 பேர் சிக்கினர்
கஞ்சா விற்பனையை காட்டிக்கொடுத்த அ.தி.மு.க., பிரமுகர் படுகொலை தி.மு.க., கவுன்சிலரின் கணவர் உட்பட 9 பேர் சிக்கினர்
கஞ்சா விற்பனையை காட்டிக்கொடுத்த அ.தி.மு.க., பிரமுகர் படுகொலை தி.மு.க., கவுன்சிலரின் கணவர் உட்பட 9 பேர் சிக்கினர்

போராட்டம்
இதற்கு முன், மாநகராட்சியில் இருமுறை, கொண்டலாம்பட்டி மண்டலக் குழு தலைவர் பதவி வகித்துள்ளார். சமீப காலமாக ரியல் எஸ்டேட், மாநகராட்சியில் சாலை ஒப்பந்த வேலைகளை செய்து வந்தார்.
உத்தரவு
இதுகுறித்து பரமேஸ்வரி அளித்த புகாரின்படி, அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிந்தனர். போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, ஐந்து தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.
சட்ட நடவடிக்கை
'துணைகமிஷனர் மதிவாணன், மதியம், 12:45 மணிக்கு,அ.தி.மு.க., மாவட்ட செயலர், எம்.எல்.ஏ., உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகளிடம் பேச்சு நடத்தினார்.அப்போது, 'சதீஷ்குமார் உட்பட ஒன்பது பேரை பிடித்து விசாரிக்கிறோம். அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறினார். ஆனால், அ.தி.மு.க. நிர்வாகிகள், 'சதீஷ்குமாரை கைது செய்யாமல் சண்முகம் உடலை வாங்க மாட்டோம்' என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.
பின்னணி என்ன?
போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:சேலம் தாதகாப்பட்டி மாரியம்மன் கோவில் டிரஸ்டியின் தலைவராக சண்முகம் இருந்தார். அப்பொறுப்பின் பதவிக்காலம் முடிந்த நிலையில், மீண்டும் பொறுப்பு வகிப்பது தொடர்பாக, மூன்று மாதங்களுக்கு முன், சண்முகம், சதீஷ்குமார் இடையே தகராறு ஏற்பட்டது. சமீபத்தில், சாக்கடை கால்வாய் அமைப்பதிலும் தகராறு ஏற்பட்டது. சதீஷ்குமார், ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்தார். அதற்கு சண்முகம் இடையூறாக இருந்தார். அதுபற்றி போலீசாருக்கும் தகவல் கொடுத்து உள்ளார்.
மேலிட அழுத்தம்
சண்முகம் குடும்பத்தினர், அ.தி.மு.க.,வினர் தொடர் போராட்டத்தால் தான், தி.மு.க., கவுன்சிலரின் கணவரான சதீஷ்குமாரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பழனிசாமி அஞ்சலி
அ.தி.மு.க., பிரமுகர் சண்முகம் உடல், சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மாலை அவரது உடலை பெற்றுக்கொள்ள, உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இந்நிலையில் அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி மருத்துவமனைக்கு வந்து, சண்முகம் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்; அவரது உறவினர்களுக்கு