அ.தி.மு.க., மாஜி அமைச்சர் முன் ஜாமின் மனு தள்ளுபடி
அ.தி.மு.க., மாஜி அமைச்சர் முன் ஜாமின் மனு தள்ளுபடி
அ.தி.மு.க., மாஜி அமைச்சர் முன் ஜாமின் மனு தள்ளுபடி
ADDED : ஜூலை 06, 2024 11:27 PM
கரூர்,:கரூர் அருகே தோரணகல்பட்டி, குன்னம்பட்டி பகுதியில் உள்ள, 22 ஏக்கர் நிலத்தை போலியான ஆவணங்களால் கிரையம் செய்தாக யுவராஜ் உள்ளிட்ட ஏழு பேர் மீது, கரூர் மேலக்கரூர் சார்-பதிவாளர் முகமது அப்துல் காதர் அளித்த புகார் மீது, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில், தன் மீதான கைது நடவடிக்கையை தவிர்க்க, முன் ஜாமின் கேட்ட அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மனு கடந்த மாதம், 25ல் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், கரூர் அருகே வாங்கல் காட்டூரை சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷ், 50, கொடுத்த புகார்படி விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர், யுவராஜ் உள்ளிட்ட பலர் மீது, ஆறு பிரிவுகளின் கீழ், வாங்கல் போலீசார் வழக்குப்பதிந்தனர்.
சி.பி.சி.ஐ.டி., வழக்கு, வாங்கல் போலீசார் பதிந்த வழக்கில், இடைக்கால முன் ஜாமின் கேட்ட விஜய பாஸ்கரின் மனு கடந்த, 4ல் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, இரு வழக்குகளின் விசாரணை நேற்று, மீண்டும் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி சண்முக சுந்தரம், முன் ஜாமின் மனுவை, 2வது முறையாக தள்ளுபடி செய்தார். தற்போது, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், 20 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாகவே உள்ளார்.