ஒகேனக்கல்லில் 57,000 கன அடி நீர்வரத்து; 6வது நாளாக பரிசல் இயக்க தடை
ஒகேனக்கல்லில் 57,000 கன அடி நீர்வரத்து; 6வது நாளாக பரிசல் இயக்க தடை
ஒகேனக்கல்லில் 57,000 கன அடி நீர்வரத்து; 6வது நாளாக பரிசல் இயக்க தடை
ADDED : ஜூலை 22, 2024 05:46 AM

ஒகேனக்கல்: கர்நாடக, கேரளா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான மைசூர், மாண்டியா, குடகு, ஹாசன், வயநாடு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரத்தால், கர்நாடகாவிலுள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நேற்று, கபினி அணையிலிருந்து வினாடிக்கு, 35,000 கன அடி, கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, 50,000 கன அடி என, இரண்டு அணைகளில் இருந்தும் மொத்தம், 85,000 கன அடி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 70,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு, 57,000 கன அடியாக குறைந்தது.
அதிக நீர்வரத்தால் ஒகேனக்கல் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மெயின் அருவி, மெயின் பால்ஸ், ஐந்தருவி, ஐவர்பாணி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால், தர்மபுரி கலெக்டர் சாந்தி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்து ஆறாவது நாளாக காவிரியாற்றில் குளிக்க, பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகத்தின் தடை தொடர்ந்தது.