நான்கு சட்டதிருத்த மசோதக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல்
நான்கு சட்டதிருத்த மசோதக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல்
நான்கு சட்டதிருத்த மசோதக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல்
ADDED : ஜூலை 18, 2024 09:23 PM

சென்னை: தமிழகத்தில் நான்கு சட்ட திருத்த மசோதாக்களுக்கு இன்று(18.07.2024) கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
சென்னையில் கழிவு நீர் இணைப்பை கட்டாயமாக்குதல், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய நகராட்சிகளை புதிய மாநகராட்சிகளாக தரம் உயர்த்துதல், புதிய மாநகராட்சிகளுக்கு வருவாய் , மக்கள் தொகை வரம்பு குறைத்தல், சென்னை காவல் சட்டத்தை மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, திருப்பூர், ஆகிய பெரு நகரங்களுக்கும் விரிவுபடுத்துதல் என 4 மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து நான்கு மசோதாக்களும் அரசிதழில் வெளியிடப்பட்டன.