Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பணிபுரியும் பெண்கள் விடுதி விருதுநகரில் அமையுமா

பணிபுரியும் பெண்கள் விடுதி விருதுநகரில் அமையுமா

பணிபுரியும் பெண்கள் விடுதி விருதுநகரில் அமையுமா

பணிபுரியும் பெண்கள் விடுதி விருதுநகரில் அமையுமா

ADDED : ஜன 25, 2024 04:48 AM


Google News
விருதுநகர்; விருதுநகர் மாவட்டத்தில் சமூக நலத்துறையின் பணிபுரியும் பெண்கள் விடுதி அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் முன்பு எப்போதும் போல் இல்லாத அளவுக்கு தொழில் வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. வெளியூரில் இருந்து பணிபுரியும் அளவுக்கு தொழில்கள் இல்லை என்றாலும் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற தாலுகாக்களில் இருந்து வேலைவாய்ப்புள்ள தாலுகாக்களுக்கு பலர் பணிபுரிய செல்கின்றனர். கல்லுாரி முடித்த பெண்கள், அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டே பணி செய்யும் பெண்கள் என பலர் உள்ளனர்.

இவர்கள் அதிக வாடகைக்கு வெளியில் தங்கும் சூழல் உள்ளது. மேலும் பாதுகாப்பற்ற சூழலை காரணம் காட்டி பெற்றோர் திருமணத்தை முடித்து வைத்து விடுகின்றனர். இதனால் பெண்கள் பணிபுரிவது குறையும் அபாயமும் உள்ளது. தற்போது மாவட்டத்தில் சமூகநலத்துறை உரிமம் பெற்று 17 தனியார் பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

பணிபுரியும் பெண்களுக்கான விடுதி அமைந்தால் மாத ஊதிய வரையறையை வைத்து கட்டணம் பெறப்படும். உணவு செலவுகள், மின்சாரம் உள்ளிட்ட பிற கட்டணங்களுக்கு பகிர்வு முறை பின்பற்றப்படும். இதனால் பணிபுரியும் பெண்கள் பயன்பெறுவர்.

மாவட்ட சமூக நல அலுவலர் ஷீலா சுந்தரி கூறியதாவது: கலெக்டர் அலுவலகம் எதிரே பணிபுரியும் பெண்கள் விடுதிக்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. திட்ட வரைவு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கும், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us