Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஆண்டு கணக்கில் நீளும் நெடுஞ்சாலை பணிகள் முடிவது எப்போது; போக்குவரத்து நெரிசலை குறைத்து மக்கள் பயன்பாட்டிற்கு

ஆண்டு கணக்கில் நீளும் நெடுஞ்சாலை பணிகள் முடிவது எப்போது; போக்குவரத்து நெரிசலை குறைத்து மக்கள் பயன்பாட்டிற்கு

ஆண்டு கணக்கில் நீளும் நெடுஞ்சாலை பணிகள் முடிவது எப்போது; போக்குவரத்து நெரிசலை குறைத்து மக்கள் பயன்பாட்டிற்கு

ஆண்டு கணக்கில் நீளும் நெடுஞ்சாலை பணிகள் முடிவது எப்போது; போக்குவரத்து நெரிசலை குறைத்து மக்கள் பயன்பாட்டிற்கு

ADDED : ஜூன் 25, 2025 06:58 AM


Google News
Latest Tamil News
மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி வழியாக ராமநாதபுரம் செல்லும் ரோடு குறுகியதாக இருப்பதால் போக்குவரத்திற்கு சிரமம் ஏற்பட்டது. பயண நேரமும் அதிகமாகிறது. இந்த ரோட்டை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றி மதுரை -- துாத்துக்குடி ரோட்டுடன் இணைக்க, முடிவு செய்யப்பட்டு 650 கோடி நிதி ஒதுக்கி பணிகள் 2019ல், துவங்கப்பட்டது.

ஆனால் ரோடு பல பகுதிகளில் பணிகள் முடியாமல் அரைகுறையாக நிற்கிறது. பல பகுதிகளில் ரோடு ஆக்கிரமிப்பில் உள்ளதால் அவற்றை அகற்றும் பணி நடந்தது. அருப்புக்கோட்டையில் இருந்து காந்திநகர் வரை உள்ள ரோடு பகுதிகளில் 2024ல், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. ரோடும் அகலப்படுத்தப்பட்டது. ஆனால் அகலப்படுத்தப்பட்ட இடங்களில் தார் ரோடு அமைக்காமல் விட்டதால், ரோடு பல பகுதிகளில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விட்டது.

இதே போன்று விருதுநகர் அல்லம்பட்டி சந்திப்பிலிருந்து அருப்புக்கோட்டை வரை உள்ள ரோடும் அகலப்படுத்தப்படாமல் உள்ளது. ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படவில்லை. அருப்புக்கோட்டையில் இருந்து பாலையம்பட்டி செல்லும் மதுரை ரோடு இருபுறமும் ஆக்கிரமிப்புகள் இருந்ததை ஒரு ஆண்டிற்கு முன்பு அகற்றி ரோட்டை அகலப்படுத்தினர். அந்தப் பகுதியிலும் தார் ரோடு அமைக்காமல் விட்டதால் மீண்டும் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் முளைக்க துவங்கி விட்டன.

ரோடு பணியை அகலப்படுத்தி விரைவாக முடிக்காமல் மந்தகதியில் நடப்பதால், மீண்டும் மீண்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது மட்டும் நெடுஞ்சாலை துறையினரின் பணியாக உள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் ரோட்டை அகலப்படுத்தும் பணிகளை விரைவாக முடித்து தார் ரோடு அமைத்தால் தான் போக்குவரத்து நெரிசல் குறையும். மாவட்ட நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us