/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/குழாய் உடைந்து ரோட்டில் ஓடும் குடிநீர்குழாய் உடைந்து ரோட்டில் ஓடும் குடிநீர்
குழாய் உடைந்து ரோட்டில் ஓடும் குடிநீர்
குழாய் உடைந்து ரோட்டில் ஓடும் குடிநீர்
குழாய் உடைந்து ரோட்டில் ஓடும் குடிநீர்
ADDED : பிப் 10, 2024 04:18 AM

சிவகாசி: சிவகாசி அரசு மருத்துவமனையில் இருந்து ரயில்வே ஸ்டேசன் செல்லும் ரோட்டில் அடுத்தடுத்து இரு இடங்களில் குழாய் உடைந்து குடிநீர் ரோட்டில் ஓடியதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சிவகாசி இரட்டை பாலத்தில் இருந்து அரசு மருத்துவமனை வழியாக ரயில்வே ஸ்டேஷன் செல்லும் ரோட்டில் குழாய் பதிக்கப்பட்டு அப்பகுதியினருக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது.
இந்நிலையில் ரயில்வே ஸ்டேஷன் அருகே அடுத்தடுத்து இரு இடங்களில் குழாய் உடைந்து குடிநீர் வெளியேறி ரோட்டில் ஓடுகிறது.
மாநகராட்சியில் போதுமான அளவு குடிநீர் வினியோகம் இல்லாத நிலையில் குழாய் உடைந்து குடிநீர் ரோட்டில் ஓடுவதால் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும் ரோட்டில் ஓடும் தண்ணீரால் வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். தவிர குழாய் சேதமடைந்த இடத்தில் ரோடும் சேதமடைந்து வருகிறது.
எனவே இப்பகுதியில் உடைந்த குழாயினை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.