ADDED : செப் 20, 2025 11:26 PM
காரியாபட்டி: காரியாபட்டியில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா முன்னிட்டு ஐந்தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் ஊர்வலம் நடந்தது.
தலைவர் கண்ணையா தலைமை வகித்தார். நிர்வாகிகள் அமுதா, சரவணன், செந்தில்குமார், மூர்த்தி, ராமகிருஷ்ணன், வேல்முருகன் முன்னிலை வகித்தனர்.
பேரூராட்சி தலைவர் செந்தில் ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
நலச்சங்க தலைவர் செந்தில், செயலாளர் மணி, துணைத் தலைவர்கள் சுப்பிரமணியம், சக்திவேல், துணைச் செயலாளர் ஆனந்தகுமார், பொருளாளர் கதிரேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.