Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விருதுநகர் ஒன்றிய அலுவலகம் முற்றுகை

விருதுநகர் ஒன்றிய அலுவலகம் முற்றுகை

விருதுநகர் ஒன்றிய அலுவலகம் முற்றுகை

விருதுநகர் ஒன்றிய அலுவலகம் முற்றுகை

ADDED : செப் 12, 2025 04:15 AM


Google News
Latest Tamil News
விருதுநகர்: நுாறு நாள் திட்டத்தில் தொடர்ந்து வேலை தர கோரி விருதுநகர் சின்னமூப்பன் பட்டி மக்கள் விருதுநகர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

விருதுநகர் அருகே சின்ன மூப்பன்பட்டி ஊராட்சியில் 200க்கும் மேற்பட்டோர் நுாறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில் ஊராட்சி நிர்வாகம் யாருக்கும் வேலை இல்லை என அறிவித்ததால் அத் தொழிலாளர்கள் கடும் சிரமப்பட்டனர்.

தொடர்ந்து வேலை தந்து வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி விருதுநகர் ஒன்றிய அலுவலகத்தில் சி.ஐ.டி.யு., தலைமையில் முற்றுகைப் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து பி.டி.ஓ., சீனிவாசன் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து பணிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து கலைந்து சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us