ADDED : பிப் 11, 2024 12:01 AM
விருதுநகர்;விருதுநகர் அருகே வடிவேல் கரையின் மலையான் நகரைச் சேர்ந்தவர் சங்கர்.
ஆடு வளர்த்து விற்பனை செய்கிறார். இவர், பிறந்து ஒரு சில மாதங்களே ஆன ஆட்டுக்குட்டிகளை வளர்ப்பதற்காக தவசிலிங்காபுரத்தைச் சேர்ந்த பெருமாள், நிலத்தில் ஆட்டுக்கிடை அமைத்திருந்தார்.நேற்று முன்தினம் மாலை ஆட்டு குட்டிகள் அடைக்கப்பட்டிருந்த கிடை தீப்பிடித்து 17 குட்டிகளும் கருகி பலியாயின.