ADDED : மார் 23, 2025 07:16 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் விலக்கு அருகில் போலீசார் வாகன சோதனை செய்தனர். அந்த வழியாக வந்த காரை பிடித்து சோதனை செய்ததில் 2 மூடைகளில் புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கார், 20 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். கடத்தி வந்த மதுரை மேலக்கால் பகுதியை சேர்ந்த அசோக் 31,ஐ கைது செய்து விசாரிக்கின்றனர்.
*ஆலங்குளம் அருகே செல்லம்பட்டியில் ராஜபாளையத்தை சேர்ந்த கந்தசாமி 48, பெட்டிக்கடையில் புகையிலை பாக்கெட் விற்பனை செய்தார். ரோந்து சென்ற போலீசார் புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.