/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/திருச்சுழியை சுற்றுலா தலமாக அறிவித்தும் வளர்ச்சி பணிகள் இல்லைதிருச்சுழியை சுற்றுலா தலமாக அறிவித்தும் வளர்ச்சி பணிகள் இல்லை
திருச்சுழியை சுற்றுலா தலமாக அறிவித்தும் வளர்ச்சி பணிகள் இல்லை
திருச்சுழியை சுற்றுலா தலமாக அறிவித்தும் வளர்ச்சி பணிகள் இல்லை
திருச்சுழியை சுற்றுலா தலமாக அறிவித்தும் வளர்ச்சி பணிகள் இல்லை
திறந்த வெளியில் தர்ப்பணம்
திருச்சுழி குண்டாற்றில் முன்னோர்களுக்கு அமாவாசை காலங்களில் தர்ப்பணம் செய்வது வழக்கம். காசி, ராமேஸ்வரம் புண்ணிய தலங்களில் போன்ற புண்ணியம் திருச்சுழி குண்டாற்றில் தர்ப்பணம் செய்தால் கிடைக்கும் என்ற ஐதிகம் உள்ளது. அமாவாசை காலங்களில் பல ஊர்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இங்கு வருவர். ஆனால் ஆற்றில் தர்ப்பணம் செய்வதற்குரிய இடங்கள் எதுவும் இல்லை. திறந்தவெளியில் மணலில் அமர்ந்து தான் காரியங்கள் செய்ய வேண்டி உள்ளது.
பஸ் ஸ்டாண்ட் இல்லை
ஆயிரக்கணக்கில் வெளியூர் பக்தர்கள் வந்து செல்லும் திருச்சுழியில் பஸ் ஸ்டாண்ட் இல்லை. 8 மாதங்களுக்கு முன்பு நரிக்குடி ரோட்டில் பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்கு இடம் பார்த்ததோடு சரி ஆனால் இன்று வரை அதற்கான பணிகள் எதுவும் நடக்கவில்லை. கோயில் எதிர்புறம் தங்கும் விடுதி உள்ளது. ஆனால் இதில் கழிப்பறை வசதிகள் செய்ய படவில்லை. மெயின் ரோட்டின் இருபுறமும் உள்ள நடைபாதைகள் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டும் பஸ் ஸ்டாண்ட் இல்லாமல் பயணிகள் வெயிலில் நின்று பஸ் ஏறும் அவலத்தில் உள்ளனர்.
தெப்பத்தில் கழிவுநீர்
கோயிலை சுற்றியுள்ள காம்பவுண்ட் பகுதியில் குப்பை கொடட்டுவது, பக்தர்களை முகம் சுளிக்க வைக்கிறது. திருச்சுழி பெரிய கண்மாயிலிருந்து, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, கோயில் தெப்பத்திற்கும் விவசாயத்திற்கும் தனியாக ஓடை அமைக்கப்பட்டு கண்மாயிலிருந்து தண்ணீர் வந்தது. இடையில் சில ஆண்டுகளுக்கு முன்பு பசு மடத்து தெருவில் உள்ள கழிவுநீர் இந்த ஓடையில் விடப்படுவதால் தெப்பத்திற்கு கழிவுநீர் வந்து சேர்கிறது. ரோட்டில் இருபுறமும் உள்ள வாறுகால்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல முடியாத நிலையில் இருக்கிறது.
கழிப்பறை தேவை
ரோட்டின் அருகில் 2 கழிப்பறைகள் மட்டும் இருக்கிறது. கூடுதலாக கழிப்பறைகள் கட்டித் தரப்பட வேண்டும். திருச்சுழியில் கல்குவாரி லாரிகள் அதிக பாரத்துடன் செல்வதால் ரோடுகள் அடிக்கடி சேதமடைகிறது. ரோட்டை அகலப்படுத்தி தரமான ரோடு போட வேண்டும்.