ADDED : பிப் 24, 2024 05:41 AM
நரிக்குடி : நரிக்குடி நாலூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரபாகரன் 26.
மதுரை திருமங்கலம் ஆலங்குளத்தை சேர்ந்த கருப்பாயியை 23, 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார். 2 மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. ஆலங்குளத்திலிருந்து நேற்று முன்தினம் நாலூருக்கு வந்த கருப்பாயி, சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார்.
வீட்டில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கட்டனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.