ADDED : ஜன 12, 2024 12:39 AM
ராஜபாளையம் : தொடக்க கல்வி ஆசிரியர்களின் பதவி உயர்வை வைக்கக்கூடிய மாநில முன்னுரிமையை வலியுறுத்தும் அரசாணை என் 243 ரத்து செய்யக்கோரி ராஜபாளையத்தில் தொடக்க கல்வித்துறை ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் ராஜபாளையம் ஒன்றிய டிட்டோ ஜாக் நிர்வாகிகள் பெண்கள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.