Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 

டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 

டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 

டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 

ADDED : செப் 09, 2025 03:43 AM


Google News
Latest Tamil News
விருதுநகர்: காலி மதுபாட்டில்களை திரும்பப்பெற வேண்டும் என்ற உத்தரவால் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள கூடுதல் பணிச்சுமையை நீக்க மாற்றுத் திட்டத்தை உருவாக்குவது, 22 ஆண்டுகளாக பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் சி.ஐ.டி.யு.-டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்டத் தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் சந்திரசேகர், நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தேவா, மாநில துணைத் தலைவர் வேல்முருகன் பேசினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us