ADDED : மே 19, 2025 05:42 AM
விருதுநகர் : விருதுநகர் ஹாஜிபி செய்யது முகமது மேல்நிலைப்பள்ளியில் 1995ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் கார்த்திகேயன், ஆசிரியர்கள் சுப்பையா, சிக்கந்தர், அஜ்மல் கான், வரதராஜன், கனி உள்பட பலர் பங்கேற்றனர். இதில் 80க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் குடும்பத்தினருடன் 30 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து கலந்துரையாடினர்.